ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே பேயம்பட்டியில் கிணற்றில் நீச்சல் பழகிய போது, தந்தையின் கண் முன்னே நீரில் மூழ்கி இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜபாளையம் அருகே பேயம்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல்(39). இவரது மனைவி பிரியா(34). இவர்களுக்கு மோகுல் கிருஷ்ணா என்ற மகனும், வர்ஷனா ஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். சக்திவேலுக்கு ஒரு கை இல்லாத நிலையில் சரியாக நடக்க முடியாமல் இருந்துள்ளார். பிரியா அப்பகுதியில் உள்ள மில்லில் கூலி வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் இன்று பிற்பகலில் நீச்சல் கற்று கொடுப்பதற்காக தனது வீட்டருகே உள்ள கிணற்றுக்கு சக்திவேல் குழந்தைகளை அழைத்து சென்றுள்ளார். மோகுல் கிருஷ்ணாவுக்கு டியூப் மூலம் நீச்சல் கற்றுக் கொடுத்துள்ளார். அப்போது டியூப் கட்டிக் கொண்டு வர்ஷனா கிணற்றில் குதித்த போது, மோகுல் கிருஷ்ணா மீது விழுந்துள்ளார். அப்போது டியூப் நழுவியதால் குழுந்தைகள் இருவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர்.
சக்திவேல் அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்து வருவதற்குள் குழந்தைகள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிந்தனர். இதையடுத்து தீயணைப்பு துறையினர் வந்து குழந்தைகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கீழராஜகுலராமன் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தந்தையின் கவன குறைவால், அவரது கண் முன்னே இரு குழந்தைகளும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
க்ரைம்
15 mins ago
வணிகம்
19 mins ago
சினிமா
16 mins ago
கருத்துப் பேழை
1 hour ago
உலகம்
38 mins ago
வணிகம்
44 mins ago
இந்தியா
54 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago