ஸ்டான்லி மருத்துவமனையில் மீண்டும் தீ விபத்து

By செய்திப்பிரிவு

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ராயபுரத்தில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புற நோயாளியாகவும், உள் நோயாளியாகவும் சிகிச்சை பெறுகின்றனர். இந்த மருத்துவமனையில் 4-வது தளத்தில் உள்ள பொது மருத்துவ பிரிவில் ஒரு பகுதியில் மருத்துவர்கள் தங்கும் அறை உள்ளது.

இங்கு நேற்று முன்தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், சிகிச்சை பெற்று வந்தவர்கள் என அனைவரும் உடனடியாக வெளியேறினர். தகவல் அறிந்து வந்த கொண்டிதோப்பு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். கடந்த வாரம் இதே மருத்துவமனையில் சிறிய தீ விபத்து ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்