நுங்கம்பாக்கம் சாலை விபத்தில் சிக்கிய இளைஞர் மூளைச்சாவு: உடலுறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முடிவு

By செய்திப்பிரிவு

நுங்கம்பாக்கத்தில் சாலை விபத்தில் சிக்கிய இளைஞர் சிகிச்சை பலனளிக்காமல் மூளைச்சாவு அடைந்ததை அடுத்து அவரது உடலுறுப்புகளை தானமாக வழங்க பெற்றோர் முடிவெடுத்துள்ளனர்.

தேனாம்பேட்டையில் வசித்தவர் தினேஷ்(22). நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கொரியர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 13-ம் தேதி அவருக்கு இரவுப் பணி. தனது அலுவலகம் அருகே சாலையில் நின்றிருந்த அவர் மீது கார் ஒன்று மோதியதில் பலத்த காயமடைந்தார்.

அவரை மீட்ட நண்பர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  தினேஷ் மேல் சிகிச்சைக்காக அரசு ராஜிவ் காந்தி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.

இதையடுத்து தினேஷின் உடலுறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முன் வந்தனர். இன்று அவரது உடலுறுப்புகள் தானத்திற்காக பெறப்படுகிறது. தினேஷ் இனிமையான சுபாவம் கொண்ட இளைஞர். தனது அன்பான நடத்தையால் ஏராளமான நண்பர்கள் அவருக்கு இருந்தனர். தற்போது தனது மரணத்திலும் பிறருக்கு உதவியுள்ளதாக உறவினர்கள் துயரத்துடன் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

உலகம்

7 hours ago

ஆன்மிகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்