வேளாங்கண்ணி திருவிழா: எழும்பூர்-நாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்

By செய்திப்பிரிவு

வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு எழும்பூர்-நாகப்பட்டினம் இடையே வரும் 8-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதன்படி, இந்த சிறப்பு ரயில் (06097) எழும்பூரில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு நாகப்பட்டினம் சென்றடையும். இதேபோல், வேளாங்கண்ணி-பன்வேல் இடையே சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (06099) 9-ம் தேதி இயக்கப்படுகிறது. இந்த ரயில் வேளாங்கண்ணியில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 7.55 மணிக்கு பன்வேல் சென்றடையும்.

கன்னியாகுமரி-சந்திரகச்சி இடையே சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (06905) 7-ம் தேதி (நாளை) இரவு 11 மணிக்கு கன்னியா குமரியில் இருந்து புறப்பட்டு 9-ம் தேதி இரவு 9.15 மணிக்கு சந்திரகச்சி சென்றடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

45 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்