பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.675 கட்டணத்துக்கு அதிக வேகத்துடன் செயல்படும் பிராட் பேண்ட் சேவையை அறிமுகப் படுத்தியுள்ளது. இதன் குறைந்த பட்ச பதிவிறக்க வேகம் 4 எம்பிபிஎஸ் ஆக உள்ளது. இதுதவிர, பல்வேறு திட்டங்களில் பதிவிறக்கம் செய்யும் அளவு 250 சதவீதம் அதிக ரிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, 20 ஜிபியில் இருந்து 70 ஜிபி வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
1199 காம்போ திட்டத்தில் பதிவிறக்க வேகம் 2 எம்பிபிஎஸ்-ல் இருந்து 4 எம்பிஎஸ் ஆக 20 ஜிபி வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒரு ஜிபிக்கான கட்டணம் ஒரு ரூபாய்க்கு குறை வாகவே உள்ளது.
இத்திட்டத்தில் ஏற்கெனவே சேர்ந்துள்ள வாடிக்கையாளர் களுக்கு இந்த புதிய பிராட்பேண்ட் சேவை மே 1-ம் தேதி முதல் வழங் கப்படும். இதற்காக மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.
மேலும், இத்திட்டத்தில் குடும்ப நண்பர்கள் இடையே 3 தரைவழி தொலைபேசி எண்களுக்கு அளவில்லா அழைப்பு வசதியும் உண்டு. இதுகுறித்து கூடுதல் விவரங்களை 1800-345-1500 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது www.chennai.bsnl.co.in என்ற இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என பிஎஸ்என்எல் நிறுவனம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
தொழில்நுட்பம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
சினிமா
9 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
12 hours ago
இந்தியா
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago