ஆளுநர் உரையில் முக்கிய அறிவிப்புகள்: இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் தனது உரையில், 149 சமத்துவபுரங்களை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது; பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க அரசு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது; மினி டைடல் பார்க் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்டு வருகிறது. 2030-ம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது; மாமல்லபுரம் அருகே துணைக்கோள் நகரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது; 2,845 சுய உதவிக்குழுக்கள் நடப்பாண்டில் தொடங்கப்பட்டுள்ளது; 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
ஆளுநர் உரையை புறக்கணித்த திமுக கூட்டணி கட்சிகள்: தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சகோதர - சகோதரிகளுக்கு வணக்கம் என்று தமிழில் தெரிவித்தார். மேலும், முதல்வர், சட்டமன்ற உறுப்பினர்கள் என்று அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் என்று தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார். அவர் தனது உரையில் 'திராவிட மாடல்', 'தமிழ்நாடு' போன்ற வார்த்தைகளை தவிர்த்து விட்டதைக் குறிப்பிட்டு, திமுக கூட்டணி கட்சிகள், ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
இந்தியா
2 hours ago
வணிகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
இணைப்பிதழ்கள்
3 hours ago
க்ரைம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
உலகம்
5 hours ago
இந்தியா
7 hours ago
சினிமா
6 hours ago