தனது கருத்தை மிக வலிமையாக சொல்லக்கூடியவர் சோ என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
சோ மறைவு குறித்து இன்று முத்தரசன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''சோ ராமசாமி இயற்கை எய்தினார் என்கிற செய்தி அதிர்ச்சியளிக்கின்றது.
வழக்கறிஞராக, நாடக நடிகராக, திரைப்பட கதை வசன கர்த்தாவாக, நடிகராக, நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக, மிகச் சிறந்த பத்திரிகையாளராக பன்முகத் தன்மை கொண்ட சோவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தனது கருத்தை மிக வலிமையாக சொல்லக்கூடியவர் சோ. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் கிண்டலும், கேலியுமாக விமர்சித்தாலும் அதே பொழுது அனைவருடனும் நட்பு பாராட்டக் கூடியவர்.
அவரது மறைவு அரசியல், பத்திரிகை, திரைப்படத் துறைகளுக்கு பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் அவர் குடும்பத்தார் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
உலகம்
6 mins ago
விளையாட்டு
56 mins ago
விளையாட்டு
1 hour ago
சினிமா
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
5 hours ago