மாணவரின் தாயாருக்கு பாலியல் தொல்லை: சிவசங்கர் பாபா மீதான வழக்கை ரத்து செய்ததை எதிர்த்து சிபிசிஐடி மனு

By செய்திப்பிரிவு

சென்னை: மாணவரின் தாயாருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபா மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ததை எதிர்த்து சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு சிவசங்கர் பாபா தரப்பில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்த மாணவரின் தாயாருக்குஅப்பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா கடந்த 2010-ம் ஆண்டு பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த 2021-ல் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சிவசங்கர் பாபா தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஏற்பட்ட காலதாமதத்தைக் காரணம்காட்டி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி சிபிசிஐடி போலீஸார் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பாக நடந்தது. அப்போது போலீஸார் தரப்பில் மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை முறையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதை கருத்தில் கொள்ளாமல் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது என வாதிட்டார். அதையடுத்து நீதிபதி, இது தொடர்பாக சிவசங்கர் பாபா தரப்பில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை நவ. 15-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்