புதுச்சேரி: திமுக எம்பி ஆ.ராசா மீது மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக்கோரி புதுச்சேரியில் வரும் 27ல் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்து முன்னணி புதுச்சேரி மாநிலத்தலைவர் சனில்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இந்துக்களை மிக இழிவாக பேசியதைக் கண்டித்து புதுச்சேரி முழுவதும் வரும் 27ல் முழு அடைப்பு நடத்த இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் முடிவு எடுத்துள்ளோம். திமுக, திகவினர் தொடர்ந்து இந்து மதத்தை மட்டும் குறிவைத்து பேசி வருவது கண்டிக்கத்தக்கது. மனுசாஸ்திரத்தை தற்போது யாரும் கடைபிடிப்பதில்லை.
நடைமுறையில் இல்லாத விஷயத்தை, தவறாக மொழிபெயர்ப்பு உள்ள விசயத்தை வைத்து எம்.பி ராசா அவதூறாக பேசுகிறார். மதரீதியாக மக்களை பிரிக்கமாட்டோம் என்று உறுதி மொழி ஏற்ற எம்.பி இதுபோல் பேசுவது தவறானது. ராசாவின் எம்.பி பதவியை பறிக்கக்கோரியும் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக்கோரியும் வரும் 27ம் தேதி காலை 5 மணி முதல் மாலை 5 வரை முழு அடைப்பு நடத்த உள்ளோம். போராட்டம் அறவழியில் நடைபெறும்" என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
க்ரைம்
2 hours ago
உலகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
வேலை வாய்ப்பு
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
கல்வி
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
வாழ்வியல்
5 hours ago