சென்னை: மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் அனுமதி இன்றி கூட்டம் நடத்திய விவகாரம் தொடர்பாக பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் உள்பட 75 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் உள்ள நவராத்திரி மண்டபத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி நடந்த கூட்டத்தில் மாநகராட்சி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் மற்றும் 25 பெண்கள் உள்பட 75 பேர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் கபாலீசுவரர் கோயில் நிர்வாகத்தை பக்தர்களே ஏற்று நடத்தவேண்டும் என்று உறுதி மொழிஎடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. உரிய அனுமதி இல்லாமல் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் எனஇந்து சமய அறநிலையத் துறை சார்பில் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்படி, போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில்,அனுமதி இன்றி கூட்டம் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் உள்பட 75 பேர்மீது 3 பிரிவுகளின்கீழ் போலீஸார்வழக்கு பதிவு செய்தனர். உமாஆனந்தன் உள்ளிட்டோரை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறுமயிலாப்பூர் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். சம்மனை ஏற்றுசென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் உள்ளிட்ட இருவர் நேற்று மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
க்ரைம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
3 hours ago
வணிகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
11 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
க்ரைம்
6 hours ago