பணத்துக்காக 8 பேர் கொல்லப்பட்ட சம்பவம்: 2 பேர் உடல் பாகங்கள் கிடைக்கவில்லை

By செய்திப்பிரிவு

பணத்துக்காக 8 பேர் கொல்லப் பட்ட சம்பவத்தில், என்.ஐ.டி. வளா கத்தில் சப்பாணி அடையாளம் காட்டிய இடங்களில் இருந்து 2 பேரின் உடல் பாகங்களை போலீஸாரால் மீட்க முடியவில்லை.

திருச்சி மாவட்டம் திருவெறும் பூர் அருகே உள்ள கிருஷ்ண சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந் தவர் சப்பாணி(35). தன் நண்பர் வேங்கூர் நடுத்தெருவைச் சேர்ந்த தங்கதுரையை கொலை செய்த வழக்கில் கடந்த வாரம் திருவெறும் பூர் போலீஸார் இவரை கைது செய் தனர். அப்போது அவரிடம் விசாரித் தபோது, இவர் தவிர மேலும் 7 பேரையும் கொலை செய்துள்ள தாக சப்பாணி வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து சப்பாணியை காவலில் எடுத்த போலீஸார், அவர் அடையாளம் காட்டிய இடங்களில் இருந்து, அவரது தந்தை தேக்கன்(70), மேலகுமரேசபுரம் கோகிலா(70), கீழ குமரேசபுரம் விஜய் விக்டர்(27), கூத்தைப்பார் சத்தியநாதன்(45), அதிமுக பேரூராட்சி கவுன்சிலர் உப்பிலியபுரம் அருகே உள்ள விஸ்வம்பாள் சமுத்திரம் குமரே சன்(50) ஆகியோரின் உடல் பாகங்களை மீட்டனர்.

மீதமுள்ள பாப்பாக்குறிச்சி அற்புதசாமி(70), கூத்தைப்பார் பெரியசாமி(65) ஆகியோரின் உடல் பாகங்களை மீட்பதற்காக காவல் ஆய்வாளர்கள் மதன், சதீஷ் உள்ளிட்ட போலீஸார் சப்பாணியை திருச்சி என்.ஐ.டி. வளாகத்துக்கு நேற்று அழைத்துச் சென்றனர். அங்கு சப்பாணி அடையாளம் காட்டிய இடங்களில் 2 மணி நேரத்துக்கும் மேல் தேடி னர். ஆனால் அற்புதசாமி, பெரிய சாமி ஆகியோரின் உடல் பாகங் களைக் கண்டறிய முடியவில்லை.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: பெரியசாமி, அற்புத சாமி ஆகியோரை கொலை செய்த பின், அவர்களது உடலை என்.ஐ.டி. வளாகத்தில் இருந்த முள்காட்டுக் குள் வீசிவிட்டுச் சென்றுவிட்டார். சம்பவம் நடைபெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

அங்கு 2 மணி நேரத்துக்கும் மேல் தேடியும் ஒரு எலும்பைக் கூட மீட்க முடியவில்லை. எனவே, திரும்பி வந்துவிட்டோம். சப்பாணியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளோம்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்