தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களின் பணி நேரம் மாற்றம் 

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களின் பணி நேரத்தை சுகாதாரத் துறை மாற்றியமைத்துள்ளது.

தமிழகத்தின் கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையங்களின் பணி நேரம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை என்று இருந்தது.

இந்நிலையில், இந்தப் பணி நேரத்தை மாற்றியமைத்து பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் பணி நேரம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்ததும் நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

9 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

58 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்