தமிழகத்தில் திமுக, அதிமுக ஆட்சிக்காலங்களில் கிராமங்கள் வளர்ச்சி அடையவில்லை என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், திருமயம் தொகுதியில் போட்டியிடும் தமாகா கட்சி வேட்பாளர் பிஎல்.ஏ.சிதம்பரத்துக்கு வாக்கு சேகரித்து அவர் பேசியது:
கடந்த 50 ஆண்டுகளில் திமுக, அதிமுக ஆட்சிக் காலங்களில் கிராமங்களில் சுகாதாரமான குடிநீர் கிடைக்கவில்லை. தரமான சாலை வசதி இல்லை. குக்கிராமங்களுக்கு போதிய பேருந்து வசதி கிடையாது. கழிப்பறை வசதி இல்லாததால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
போதிய அளவு பள்ளிகள் இல்லாததால் கல்வியின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் தகுதியான ஆசிரியர்கள் இல்லை. இலவசங்கள் என்ற பெயரில் பல வருடங்களாக திமுகவும், அதிமுகவும் மக்களை ஏமாற்றி வருவதால் தமிழகத்தில் கிராமங்கள் வளர்ச்சி அடையவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால் மக்களிடம் மனமாற்றம் தேவை என்றார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
31 mins ago
ஜோதிடம்
50 mins ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
8 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
உலகம்
10 hours ago
ஆன்மிகம்
10 hours ago