அதிமுக, திமுக ஆட்சிகளால் கிராமங்களில் வளர்ச்சி இல்லை: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் திமுக, அதிமுக ஆட்சிக்காலங்களில் கிராமங்கள் வளர்ச்சி அடையவில்லை என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், திருமயம் தொகுதியில் போட்டியிடும் தமாகா கட்சி வேட்பாளர் பிஎல்.ஏ.சிதம்பரத்துக்கு வாக்கு சேகரித்து அவர் பேசியது:

கடந்த 50 ஆண்டுகளில் திமுக, அதிமுக ஆட்சிக் காலங்களில் கிராமங்களில் சுகாதாரமான குடிநீர் கிடைக்கவில்லை. தரமான சாலை வசதி இல்லை. குக்கிராமங்களுக்கு போதிய பேருந்து வசதி கிடையாது. கழிப்பறை வசதி இல்லாததால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

போதிய அளவு பள்ளிகள் இல்லாததால் கல்வியின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் தகுதியான ஆசிரியர்கள் இல்லை. இலவசங்கள் என்ற பெயரில் பல வருடங்களாக திமுகவும், அதிமுகவும் மக்களை ஏமாற்றி வருவதால் தமிழகத்தில் கிராமங்கள் வளர்ச்சி அடையவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால் மக்களிடம் மனமாற்றம் தேவை என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

31 mins ago

ஜோதிடம்

50 mins ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

உலகம்

10 hours ago

ஆன்மிகம்

10 hours ago

மேலும்