திருத்தணி அருகே உள்ள வீரகநல்லூரில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேசியதாவது: திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் இலவசங் களை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகின்றன. இந்த ஆட்சிகள் மக்களுக்காக எதையும் செய்ய வில்லை. இதனால், தமிழகம் எல்லாவற்றிலும் பின்னோக்கி சென்றுள்ளது.
நூறு யூனிட் இலவச மின்சாரம் தருவதாக அதிமுக அறிவித் துள்ளது. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், 24 மணி நேரமும் தங்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள் ளப்படும். தமிழகத்தில் வெளிப்படை யான ஆட்சி அமைய பாஜகவுக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் திராவிட கட்சிகள் உடைந்து பல கட்சிகளாக உள்ளன. ஆனால், பாஜக அன்று முதல் இன்று வரை ஒரே குடையின் கீழ் உள்ளது. அந்தமான், காஷ்மீர், அருணாச்சல பிரதேசத்தில் ஆட்சியை பிடித்துள்ளோம். ஆந்திராவில் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளோம். அதேபோல், தமிழகத்திலும் பாஜக ஆட்சி மலரும் என்று அவர் பேசினார். தமிழக முன்னாள் அமைச்சர் ஹண்டே, திரைப்பட நடிகர் பானுசந்தர் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
22 mins ago
சினிமா
29 mins ago
விளையாட்டு
52 mins ago
வணிகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
கல்வி
1 hour ago
சினிமா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago