சசிகலாவுக்கு பினாமிகளாக செயல்பட்டதாக வருமானவரித் துறை நடவடிக்கையை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்குகள் தள்ளுபடி

By செய்திப்பிரிவு

சென்னை: பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட கோடிக்கணக்கான கரன்சி நோட்டுகளைப் பயன்படுத்தி சொத்துகளை வாங்க வி.கே. சசிகலாவுக்கு பினாமிகளாக செயல்பட்டதாக வருமானவரித் துறையினரின் நடவடிக்கையை உறுதி செய்த உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.

நாடு முழுவதும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்ட பிறகு கடந்த 2017-ம் ஆண்டு வி.கே.சசிகலாவின் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக தொழிலதிபர் வி.எஸ்.ஜே.தினகரனின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்திய வருமானவரித் துறையினர், பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

ரூ.1600 கோடி

அதனடிப்படையில் ரூ. 1,600 கோடி அளவுக்கு பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சிகள் மூலமாக, பல்வேறு சொத்துகளை வாங்க சசிகலாவுக்கு பினாமியாக செயல்பட்டாகக் கூறி கங்கா பவுண்டேஷன், வி.எஸ்.ஜே தினகரன், ஸ்பெக்ட்ரம் மால் உரிமையாளர்கள், பாலாஜி, ஓஎம்ஆர் சாலையில் உள்ள மார்க் ஸ்கொயர் ஐடி பார்க், புதுச்சேரி ஓசன் ஸ்பிரே உள்ளிட்ட நிறுவனங்களின் சொத்துகளை வருமானவரித் துறையினர் பினாமி சட்டத்தின் கீழ் முடக்கியுள்ளனர்.

இதை எதிர்த்து தினகரன், பாலாஜி, கங்கா பவுண்டேஷன் உள்ளிட்ட 14 பேர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த தனி நீதிபதி, வருமானவரித் துறையினரின் நடவடிக்கைகளில் தலையிட மறுத்து, அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

மேல் முறையீடு

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தினகரன், பாலாஜி, உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், தாங்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இடத்தை விற்பனை செய்துள்ளதாகவும், தங்களுக்கு எதிராக பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும், எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும், என வாதிடப்பட்டது.

ஆனால் வருமானவரித் துறை சார்பில், கடும் நிதி நெருக்கடி காரணமாக ஸ்பெக்ட்ரம் மாலை விற்பனை செய்ய அதன் உரிமை
யாளர்கள் முடிவு செய்ததாகவும், அதற்காக அவர்கள் ஒரு ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் மூலமாக சசிகலாவின் வழக்கறிஞரை அணுகியதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஸ்பெக்ட்ரம் மாலுக்கான விற்பனை தொகையை அதன் உரிமையாளர்களுக்கு வழங்க மேற்கொண்ட நடைமுறை, வாங்குபவரின் பெயர் இல்லாமல் ஒப்பந்தங்கள் மேற்கொண்டது போன்ற நடவடிக்கைகள் காரணமாகவே, பினாமி சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதில் எந்த தவறும் இல்லை என வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “மனுதாரர்களுக்கு போதிய வாய்ப்பை அளித்து, அதன்பிறகே வருமானவரித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதை தனி நீதிபதியும் உறுதி செய்துள்ளார். எனவே தனி நீதிபதியின் உத்தரவில் தலையீடு செய்ய போதுமான காரணங்கள் இல்லை. எனவே இந்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்கிறோம்” என உத்தரவிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

க்ரைம்

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்