அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, கடலூர், நெய்வேலி தொகுதியில் போட்டியிடும் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜய காந்த் நேற்று முன்தினம் பண் ருட்டியில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசிய தாவது: கடலூர் மாவட்டத்தில் தானே புயல் ஏற்பட்டபோதும், வெள்ளப்பாதிப்பு ஏற்பட்ட போதும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற வராத ஜெயலலிதா, இப்போது மட்டும் ஏன் வருகிறார். வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோது இலவச மின்சாரம் தராதவர், தற்போது தருவதாக கூறுகிறார். மின்சாரமே இல்லாதபோது எங் கிருந்து தருவார்?
தற்போது எல்லோரிடமும் செல்போன் உள்ளது. ஆனால் ஒரு ரேஷன் கார்டுக்கு ஒரு செல்போன் என்ற இலவச அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவருக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால் இலவசங்களை அறிவிக்கிறார்.
கட்டண உயர்வு
ஜெயலலிதா ஆட்சியில் மின் கட்டணம், பேருந்து கட்டணம், பால் விலையை உயர்த்தியதால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறினேன். தற்போது பால் விலையை குறைப்பதாக கூறியுள்ளார். அதிமுகவும், திமுக வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
வருகிற சட்டப்பேரவை தேர்தல் தர்மத்துக்கும், அதர் மத்துக்கும் இடையே நடை பெறும் போர். இவ்வாறு பேசினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
18 mins ago
வணிகம்
43 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
க்ரைம்
1 hour ago
சுற்றுச்சூழல்
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
சுற்றுலா
4 hours ago
சினிமா
4 hours ago