தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான நேற்று, முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் கடும் வெயிலையும் பொருட்படுத் தாமல் வேட்பாளர்கள் வீதி, வீதி யாகச் சென்று வாக்கு சேகரித் தனர்.
முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா சென்னை ஆர்.கே.நகர் தொகுதி யில் போட்டியிடுகிறார்.
ஏப்ரல் 25-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்த அவர், கடந்த 6-ம் தேதி ஆர்.கே.நகரில் பிரச் சாரம் செய்தார். பிரச்சாரத் தின் கடைசி நாளான நேற்று முதல்வர் ஜெயலலிதாவுக்காக அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன், வடசென்னை மக்களவை உறுப்பினர் டி.ஜி.வெங்கடேஷ் பாபு உள்ளிட்டோர் காலை முதல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர்.
திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன் காலை முதல் ஓய்வின்றி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, வண்ணாரப் பேட்டை பகுதிகளில் திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக வலம் வந்த அவர், தனக்கு வாய்ப்பளிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் கல் வியாளர் வசந்திதேவி, கூட்டணி கட்சியினருடன் தண்டையார்பேட்டையில் முஸ் லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.
பாஜக வேட்பாளர் எம்.என்.ராஜா தண்டையார்பேட்டை பகுதியில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.
பாமக வேட்பாளர் ஆக்னஸ், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திருநங்கை தேவி ஆகியோரும் மாலை 6 மணி வரை இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சுயேட்சை வேட்பாளர்களையும் நேற்று பல இடங்களில் பிரச்சார களத்தில் காண முடிந் தது.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
சினிமா
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
சினிமா
7 hours ago
இந்தியா
8 hours ago