மாதவரம் சட்டப்பேரவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஏ.எஸ்.கண்ணனை ஆதரித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று செங்குன்றம் பகுதியில் பேசியதாவது:
அதிமுக ஆட்சியில் தமிழகத் தில் ஊழல் மலிந்துவிட்டது.இளைஞர்கள் மதுவுக்கு அடிமை யாகிவிட்டனர். வெளிப்படையான நிர்வாகம் இல்லாமல் தனிநபர் அதிகாரமும் மேலோங்கி உள்ளது.
இப்போது தேர்தல் வந்துவிட்டது என்பதற்காக படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவருவோம் என்று ஜெயலலிதா சொல்வது பொய்யான பேச்சாகும். அதிமுக, திமுக இரு கட்சிகளும் மதுவிலக்கை அமல் படுத்தமாட்டார்கள். ஏனென்றால், மதுவை உற்பத்தி செய்யும் ஆலைகளை இந்த இரு கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் நடத்துகிறார்கள். அதனால் வருகிற லாபத்தை இழக்க அவர்கள் தயாராக இல்லை.
மற்ற கட்சிகளைப் போல நாங்கள் பண செல்வாக்கு உள்ள கட்சிகள் அல்ல. மக்களிடம் எங்களுக்கு செல்வாக்கு உள்ளது. மக்கள் நலக் கூட்டணி மதுவில்லாத, ஊழலில்லாத, வெளிப்படையான நிர்வாகத்தை அளிக்கும் என்றார்
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
13 mins ago
வாழ்வியல்
4 mins ago
இந்தியா
18 mins ago
தமிழகம்
39 mins ago
சினிமா
35 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
59 mins ago
க்ரைம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago