சென்னை: மத்திய அரசைக் கண்டித்து சென்னை, வேலூர் உட்பட 6 நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
குடியுரிமை திருத்தச் சட்டம், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு உரிமைகளை வழங்கும் அரசியல் சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்தது, பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான முயற்சிகள் என சிறுபான்மை மக்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. பாஜக பிரமுகர்கள் வெறுப்பு அரசியலைத் தூண்டும் வகையில் பொதுவெளியில் பேசுகின்றனர்.
சிறுபான்மை மக்களுக்கு எதிரான, மத்திய மற்றும் மாநில பாஜக அரசுகளின் நடவடிக்கைகளை கண்டித்து சென்னை, வேலூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், திருப்பூர், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. சென்னையில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையிலும், வேலூரில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
40 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
உலகம்
4 hours ago
ஆன்மிகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago