கரோனா தொற்று பாதிப்பு : சுற்றறிக்கை திரும்ப ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்திற்கு உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: கரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து, மாணவர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்ற சுற்றறிக்கை திரும்ப ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்திற்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் 35 பேருக்கு இதுவரை தொற்று உறுதி சசெய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு சனிக்கிழமை முதல் விடுதி மூடப்படும் எனவும், வகுப்புகள் திங்கட்கிழமை முதல் ஆன்லைன் மூலம் நடைபெறும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவ மாணவிகள் உடனே வெளியே உத்தரவிட்டுப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுகாதாரத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதில், சுகாதாரத்துறையிடம் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக இந்த எடுக்கப்பட்டு உள்ளதாகவும், சுற்றறிக்கையில் உள்ள நடைமுறைகள் திரும்பபெற வேண்டும் என்றும், மாணவர்களை வெளியேற்ற கூடாது என்று ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 min ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

45 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்