அமைச்சர் பதவிக்காக திமுகவை விமர்சிக்கிறார் அண்ணாமலை: அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி

By செய்திப்பிரிவு

திண்டுக்கல்: மத்திய அரசில் அமைச்சர் பதவி பெறுவதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவை விமர்சித்து வருகிறார் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த ஓராண்டு ஆட்சியில் எள்முனை அளவுகூட முறைகேடின்றி அரசு திட்டங்களை நேர்மையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறோம்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஏற்கெனவே ஐபிஎஸ் அதிகாரியாக இருந்திருக்கிறார். அவருக்கு எல்லாம் தெரியும். ஆனாலும் அரசியல் ஆதாயத்துக்காக தொடர்ந்து இப்படி பேசி வருகிறார். மத்திய அரசில் ஏதாவது அமைச்சர் பதவி கிடைக்காதா என்பதற்காக இவ்வாறு பேசுகிறார். ஏற்கெனவே மாநில தலைவராக இருந்த முருகன் இதேபோல் திமுகவை விமர்சனம் செய்து அமைச்சர் பதவி பெற்றுவிட்டார். அதற்கு முன்பு மாநில தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் திமுகவை விமர்சனம் செய்து ஆளுநராக ஆகிவிட்டார். அவர்களை போல் தற்போது அண்ணாமலையும் செயல்படுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

1 min ago

தமிழகம்

21 mins ago

க்ரைம்

37 mins ago

தமிழகம்

41 mins ago

இந்தியா

22 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்