ஊழல் முறைகேடுகளில் திமுக, அதிமுகவுக்கு சமபங்கு: முத்தரசன் புகார்

By செய்திப்பிரிவு

விழுப்புரத்தில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செய லாளர் முத்தரசன் நேற்று நிரு பர்களிடம் கூறியதாவது: தேர்தல் ஆணையம், பணம் கொடுப்பதை சரிவர தடுக்கவில்லை.

வாக்குக்கு பணம் விநியோகித் தால் கைது செய்யப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால் ஒட்டன்சத்திரத்தில், திமுக வேட்பாளர் சக்கரபாணி தலைமையில் 15 பேர் பணம் கொடுத்தபோது சிக்கி னர். சென்னை உள்ளிட்ட இடங்க ளில் பணம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. எதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஜனநாயகத்தை பாதுகாக்க நடு நிலையான தேர்தல் ஆணையம் வேண்டும்.

இயற்கை வளங்களை கொள் ளையடித்தது முதல் பல ஊழல்களுக்கு திமுக, அதிமுக வுக்கு சமபங்கு உள்ளது. விஏஓ முதல் தலைமை செயலர் வரை லஞ்சம் உள்ளது. ஊழல் தொடர்கிறது. ஒப்பந்தப்பணிக்கு, கூடுதல் கமிஷன் கேட்பதாக பொறியாளர் சங்கத்தினர் இதனை வெளிப்படுத்தினர். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 mins ago

வணிகம்

27 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்