மதுரையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக அதிமுகவினர் 5 பேர் மீது போலீ ஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மதுரை செல்லூர் பாலம் ஸ்டேஷன் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் முன் அதிமுகவினர் சிலர் நேற்று காலை வாக்காளர் பட்டியல், பணத்துடன் நிற்பதாக பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கையில் பணம் வைத்திருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக ஜெயபாலன், ராஜேந்திரன், கணேசன், இளைய ராஜா, வழக்கறிஞர் ஜெயபால் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்த செல்லூர் போலீஸார் அவர்களிடம் இருந்த ரூ.3,040 மற்றும் வாக்காளர் பட்டியலை பறிமுதல் செய்தனர். இவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
இந்தியா
45 mins ago
கருத்துப் பேழை
29 mins ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
தமிழகம்
6 hours ago
சினிமா
3 hours ago
இந்தியா
3 hours ago