சாலை அமைப்பதில் விதிமீறல்: சென்னை மாநகராட்சி பொறியாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: சாலை அமைப்பதில் விதிமீறல் புகார் தொடர்பாக சென்னை மாநகராட்சி செயற்பொறியாளரை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.

‘சென்னை மாநகராட்சி 2-வது மண்டலம் 16 வாட்டில், சடையன் குப்பம் பர்மா நகர் பகுதியில் உள்ள 4, 7 மற்றும் 14-வது தெருக்களில் பழைய சாலைகளை அகற்றாமல் புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையின் உயரம் அதிகரித்துள்ளது.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பழைய சாலைகளை அகற்றாமல் புதிய சாலைகளை அமைக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விதிகளை மீறி சென்னை மாநகராட்சி பொறியாளர் இந்த சாலைப் பணிகளுக்கு அனுமதி அளித்துள்ளார்.

இது குறித்து அந்தப் பகுதி மக்கள் மாநகராட்சிக்கு புகார் அளித்தனர். இந்தப் புகாரை விசாரித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, 2-வது மண்டல செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணனை கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்