இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சி.மகேந்திரன் திருச்சியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுகவினர் காவல் துறையை பயன்படுத்தி வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் தவறிவிட்டது. ஆங்காங்கே சில அதிகாரிகளை வைத்து பணம் பறிமுதல் செய்வது போல தேர்தல் ஆணையம் நாடக மாடி வருகிறது. ஆனால், வாக்காளர் களுக்கான பணம், இலவச பொருட் கள் அனைத்தும் அவர்கள் வசிக் கும் பகுதிகளுக்கே சென்றுவிட்டது. இது ஜனநாயகத் துக்கு ஏற்பட்டுள்ள தலைகுனிவு. இதற்கான முழு பொறுப்பையும் தேர்தல் ஆணை யம் ஏற்க வேண்டும்.
தேர்தல் அநியாயங்களை எதிர்க் கக்கூடிய இளைஞர் படையை உருவாக்க வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம்.
திமுக, அதிமுகவினர் பணத் தைக் கொடுத்து வாக்குகளை வாங்க முயற்சிக்கின்றனர். தேர்த லில் யார் வெற்றி பெறுவார்கள் என ஊடகங்கள் மூலம் தற்போது கருத்து திணிப்பு நடைபெறுகிறது. மக்கள் அதை நம்ப மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
14 mins ago
இந்தியா
23 mins ago
இந்தியா
34 mins ago
உலகம்
34 mins ago
இந்தியா
45 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
3 hours ago