கணிதத்தில் 3,361 மாணவர்கள் முழு மதிப்பெண்: இயற்பியலில் 5 பேர் மட்டுமே 200-க்கு 200

By செய்திப்பிரிவு

பிளஸ்-2 தேர்வில் கணித பாடத்தில் 3,361 பேர் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். எனினும் இது கடந்த ஆண்டை விட சுமார் 3 மடங்கு குறைவு. கடந்த ஆண்டு 9,710 பேர் கணிதத்தில் சென்டம் எடுத்திருந்தனர்.

இயற்பியலில் 5 பேரும் (கடந்த ஆண்டு 124 பேர்), வேதியியல் பாடத்தில் 1,703 பேரும் (கடந்த ஆண்டு 1,049 பேர்), உயிரியலில் 775 பேரும் (கடந்த ஆண்டு 387 பேர்), தாவரவியலில் 20 பேரும் (கடந்த ஆண்டு 75 பேர்), விலங்கியலில் 10 பேரும் (கடந்த ஆண்டு 4 பேர்) 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

மேலும், கணினி அறிவியல் பாடத்தில் 303 பேரும், வணிகவியலில் 3,084 பேரும், கணக்குப் பதிவியல் பாடத்தில் 4,341 பேரும், வணிக கணிதத்தில் 1,072 பேரும் சென்டம் வாங்கியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

31 mins ago

தமிழகம்

21 mins ago

சினிமா

29 mins ago

தமிழகம்

51 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

52 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்