சென்னை: தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங் களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (ஏப். 25) தொடங்குகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த மாநாட்டைத் தொடங்கிவைக்கிறார்.
தமிழக ஆளுநர் மாளிகை சார்பில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள்மாநாடு உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்றும்,நாளையும் (திங்கள், செவ்வாய்க் கிழமை) நடைபெற உள்ளது.
புதிய உலக சூழலில் இந்தியாவின் பங்கு, 2047-ம் ஆண்டு இந்தியா முன்னணி ஆகிய கருத்துகளை மையப்படுத்தி நடத்தப்படும் இந்த மாநாட்டில், பல்கலைக்கழக மானியக் குழுத் (யுஜிசி) தலைவர் எம்.ஜெகதீஷ் குமார், ஜோஹோ கார்ப்பரேஷன் தலைமைச் செயல்அலுவலர் தர் வேம்பு சிறப்புரையாற்றுகின்றனர்.
இதில், தமிழகத்தில் உள்ள மாநில அரசு பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் கலந்து கொள்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
19 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
உலகம்
1 hour ago
வர்த்தக உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
உலகம்
2 hours ago
சினிமா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago