ஆறுமுக கூட்டணிக்கு இனி ஏறுமுகம் தான்: திருச்செந்தூரில் பிரேமலதா பிரச்சாரம்

By செய்திப்பிரிவு

திருச்செந்தூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரேமலதா ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழ்நாட்டில் இதுவரை அமையாத வெற்றிக் கூட்டணியாக நமது கூட்டணி அமைந்துள்ளது. திருச்செந்தூர் தான் சூரசம்ஹாரம் செய்து எதிரிகளை துவம்சம் செய்த தொகுதி. சூரசம்ஹாரம் போல எதிரிகளை வீழ்த்தி இந்த தொகுதியை கைப்பற்றி சாதனை படைக்க வேண்டும்.

பஞ்சபாண்டவர்களாக இருந்த நமது கூட்டணி தற்போது 6 தலைவர்களை கொண்ட ஆறுபடை வீடுபோல ஆறுமுக கூட்டணியாகியுள்ளது.

ஆறுமுகம் என்றாலே ஏறுமுகம் தான். இனி இறங்கு முகம் கிடையாது. இந்த ஏற்றம் இனி தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

திமுக சார்பில் இந்த தொகுதியில் போட்டியிடும் அனிதா ராதாகிருஷ்ணன் 3 முறை வெற்றி பெற்றுள்ளார். ஆனால், தொகுதிக்கு ஏதாவது செய்துள்ளாரா என்றால், அது மிகப்பெரிய கேள்விக்குறிதான்.

தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலை படுமோசமாக உள்ளதை பார்க்கும் போது, இந்த ஆட்சியின் நிலையை நினைத்து வேதனையாக இருக்கிறது. பணம் கொடுத்து வெற்றி பெறலாம் என நினைக்கின்றனர். 100-க்கும், 500-க்கும் ஓட்டுப் போட்டால் இன்னும் 100 ஆண்டு ஆனாலும் திருச்செந்தூர் வளர்ச்சி பெறாது. சாலை இப்படியே தான் இருக்கும்’ என்றார் அவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

தமிழகம்

3 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

14 mins ago

இந்தியா

37 mins ago

விளையாட்டு

29 mins ago

இந்தியா

37 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

மேலும்