தேமுதிக காஞ்சிபுரம் தொகுதி வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார். ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட சண்முகசுந்தரத்துக்கு பதிலாக ஏகாம்பரம் போட்டியிடுகிறார்.
இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2016 தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த சண்முகசுந்தரம் மாற்றப்பட்டு சி.ஏகாம்பரம் நியமிக்கப்படுகிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவருக்கு தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் மக்கள் நலக்கூட்டணி, தமாகா ஆகிய கூட்டணி கட்சியை சார்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும், தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபட்டு பொதுமக்களின் பேராதரவை திரட்டி கழக வேட்பாளரை வெற்றிபெற செய்ய வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
இந்தியா
17 mins ago
இந்தியா
29 mins ago
இந்தியா
39 mins ago
இந்தியா
47 mins ago
சுற்றுச்சூழல்
57 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
52 mins ago
விளையாட்டு
1 hour ago
கருத்துப் பேழை
4 hours ago
தமிழகம்
3 hours ago