அதிமுகவோடு கூட்டணியில் உள்ள கட்சிகளையும் அதிமுக சின்னத்தில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்துவது ஜனநாயகப் படுகொலை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நேற்று அவர் கூறியது: அதிமுக 227 இடங்களில் போட்டியிடுகிறது. 7 இடங்களை மட்டுமே கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது. கூட்டணி கட்சிகளையும் அதிமுகவின் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என வலியுறுத்துவது ஜனநாயகப் படுகொலை. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக அமைந்துள்ள தேமுதிக - மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு பெருகி வருகிறது. இந்தக் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைய வேண்டும் என மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறோம்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. இதுகுறித்து தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு விசுவாசமாகவே செயல்படுகிறது என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
இந்தியா
20 mins ago
தமிழகம்
51 mins ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago