தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று கோவை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது,
‘இன்னும் ஓரிரு நாட்களில் குலாம்நபி ஆசாத் சென்னைக்கு வந்து திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க உள்ளார். அப்போது, காங்கிரஸ் தொகுதிகளின் எண்ணிக்கை முடிவாகும். திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் இதுவரை எந்த சிக்கலும் இல்லை’ என்றார். திமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைய வாய்ப்புள்ளதா எனக் கேட்டபோது, ‘திமுக கூட்டணியில் தமாகாவுக்கு வாய்ப்பில்லை. இதை திமுக பொருளாளர் ஸ்டாலின் ஏற்கெனவே தெளிவுபடுத்தியிருக்கிறார். அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு வழங்க பணத்தை ஆளுங்கட்சியினர் பதுக்கி வைத்துள்ளனர். அதைக் கண்டறிந்து பறிமுதல் செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
32 mins ago
சினிமா
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
சினிமா
6 hours ago
இந்தியா
7 hours ago
வணிகம்
15 hours ago