ஆளுநர் ஆர்.என்.ரவி குமரி வருகை

By செய்திப்பிரிவு

நாகர்கோவில்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று மாலை கன்னியாகுமரி வருகை தந்தார். கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் ரூ. 15 கோடி மதிப்பில் சுவாமி விவேகானந்தா சபாகிரகம் எனும் புதிய கலையரங்க கூடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கலையரங்கம் இன்று (20-ம் தேதி) திறக்கப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் பங்கேற்பு

இவ்விழாவுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தலைமை வகிக்கிறார். சபாகிரகம் கலையரங்க கூடத்தையும், உணவருந்தும் கூடத்தையும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைக்கிறார். இதற்காக நேற்று மாலை கன்னியாகுமரிக்கு ஆளுநர் வருகை தந்தார். அவரை ஆட்சியர் மா.அரவிந்த் வரவேற்றார்.

இந்த விழாவை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 mins ago

க்ரைம்

46 mins ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வேலை வாய்ப்பு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

மேலும்