புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 1,160 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் இன்று (ஜன. 16) வெளியிட்டுள்ள தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 2,657 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-974, காரைக்கால்-129, ஏனாம்-17, மாஹே-40 என மொத்தமாக 1,160 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரி ராமநாதபுரத்தைச் சேர்ந்த 31 வயது நபர் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,887 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.37 சதவீதமாக உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை மொத்தமாக 1 லட்சத்து 37 ஆயிரத்து 710 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது மருத்துவமனைகளில் 133 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 7,469 பேரும் என மொத்தம் 7,602 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக 142 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 21 (92.96 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 14 லட்சத்து 97 ஆயிரத்து 73 தடுப்பூசிகள் (இரண்டு டோஸ் சேர்த்து) போடப்பட்டுள்ளது.’’
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
26 mins ago
விளையாட்டு
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
க்ரைம்
3 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
க்ரைம்
3 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
சுற்றுலா
5 hours ago