மக்கள் நலக் கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தை கள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னை தி.நகரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார பாடல் குறுந்தகடு வெளியிடப்பட்டது.
அப்போது நிருபர்களிடம் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது:
தேமுதிக - ம.ந.கூட்டணி - தமாகா அணி பலமான அணியாக உருவெடுத்துள்ளது. இந்த அணி தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் தேர்வு குறித்து மாநிலக் குழு ஆலோசனை நடத்த உள்ளது. வேட்பாளர் பட்டியலை நாளை (இன்று) வெளியிட உள்ளோம்.
எங்கள் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், பிருந்தா காரத் உள்ளிட்டோர் பிரச்சாரம் மேற் கொள்ள உள்ளனர். அரூர் தொகுதியை எங்கள் அணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டதால் அவர் களுக்கு கொடுத்துள்ளோம். விசிக-விடம் இருந்த திரு.வி.க. நகரில் நாங்கள் போட்டியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறும்போது, ‘‘வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பட்டியலை நாளை (இன்று) வெளியிடுவோம்’’ என்றார்.
விசிக சார்பில் போட்டியிட விரும்புவர்களிடம் அக்கட்சித் தலைவர் திருமாவளவன் கடந்த 2 நாட்களாக நேர்காணல் நடத்தி வருகிறார். அந்தக் கட்சியின் வேட்பாளர் பட்டியலும் இன்று வெளியிடப்படுகிறது. காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டியிட வாய்ப்புள்ளதாக விசிக வட்டாரங்கள் தெரிவித்தன.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
வலைஞர் பக்கம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
இந்தியா
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
5 hours ago