பாஜகவுடன் பேசவில்லை: ஜி.கே.வாசன் விளக்கம்

By செய்திப்பிரிவு

பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விளக்கம் அளித்துள்ளார்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

பாஜகவுடன் கூட்டணி பேச்சு நடத்தியதாக என் மீது இளங்கோவன் குற்றம்சாட்டியிருக்கிறார். இது முற்றிலும் தவறான தகவல். பாஜகவுடன் கூட்டணி பேச்சு எதையும் நடத்தவில்லை. இளங்கோவன் தனது கட்சியைவிட தமாகாவை பற்றிதான் அதிகமாக கவலைப்படுகிறார்.

நாங்கள் காங்கிரஸில் இருந்து வெகுதூரம் விலகி வந்துவிட்டோம். எனவே, தமாகா பற்றியும் தமாகாவின் எதிர்காலம் பற்றியும் அவர் கவலைப்படத் தேவையில்லை.

தமாகாவின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டே தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது என முடிவு செய்துள்ளோம். கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. கட்சி நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவை தொண்டர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இவ்வாறு வாசன் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

13 mins ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

9 hours ago

ஆன்மிகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்