புதுச்சேரி: புதுச்சேரியில் மீண்டும் தினசரி கரோனா பாதிப்பு 100-ஐ தாண்டிய நிலையில், புதிதாக 129 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இன்று (ஜன. 6) வெளியிட்ட தகவலில், 'புதுச்சேரி மாநிலத்தில் 3,608 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 84 பேர், காரைக்காலில் 36 பேர், ஏனாமில் ஒருவர், மாஹேவில் 8 பேர் என மொத்தம் 129 பேருக்கு (3.58 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 29 ஆயிரத்து 821 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 72 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 327 பேரும் என மொத்தமாக 399 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும், உயிரிழப்பு இல்லை. இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,881 ஆகவும், இறப்பு விகிதம் 1.45 சதவீதமாகவும் இருக்கிறது. புதிதாக 8 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 541 (98.24 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என 14 லட்சத்து 20 ஆயிரத்து 267 (2 டோஸ் உட்பட) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, புதுச்சேரியில் படிப்படியாக கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கடந்த 3 நாட்களில் மட்டும் 268 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனா விதிமுறைகளை பொதுமக்கள் கட்டாயமாக பின்பற்ற வேண்டுமென சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
விளையாட்டு
3 hours ago
க்ரைம்
4 hours ago
உலகம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
வேலை வாய்ப்பு
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
கல்வி
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago