`திமுக- காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக நிச்சயம் இடம்பெறும்’ என, அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஆபிரகாம்ராய் மணி தெரிவித்தார்.
தூத்துக்குடியில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது. இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் எஸ்.எம்.சகாயராஜ் தலைமை வகித்தார். அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஆபிரகாம்ராய் மணி பேசினார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘திமுக- காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் வெற்றி கூட்டணியாக அமைந்துள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த கூட்டணி அமோக வெற்றிபெறும். திமுக- காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக நிச்சயம் இணையும். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
சட்டப்பேரவை தேர்தலில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கணிசமான இடங்களில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறோம். இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரிடம் ஏற்கெனவே பேசப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்கு ராகுல் காந்தி நிச்சயம் வருவார். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 20 பேரையும் விரைவாக மீட்க வேண்டும்’ என்றார் அவர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
சினிமா
4 hours ago
விளையாட்டு
5 hours ago
வணிகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
க்ரைம்
7 hours ago
சுற்றுச்சூழல்
7 hours ago
க்ரைம்
8 hours ago
இந்தியா
7 hours ago
சினிமா
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago