பிரேமலதாவுக்கு பாதுகாப்பு கேட்டு தேர்தல் அதிகாரியிடம் மனு

By செய்திப்பிரிவு

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் தேமுதிக தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி எம்எல்ஏ சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் தேமுதிக சார்பில் தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இதில் பிரேமலதா விஜயகாந்த் சிறப்புரை ஆற்றவுள்ளார். இக்கூட்டம் மார்ச் 25 முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.

எனவே, தேமுதிக தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டத்துக்கும் அதில் கலந்துகொள்ளும் பிரேமலதாவுக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 mins ago

தொழில்நுட்பம்

48 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்