புதுச்சேரியில் சத்யஜித்ரே நூற்றாண்டு விழா: இன்று தொடங்கி 3 நாட்களில் 9 திரைப்படங்கள் திரையிடப்படும்

By செய்திப்பிரிவு

புதுச்சேரி: சத்யஜித் ரே நூற்றாண்டு திரு விழா புதுச்சேரியில் இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. இந்நிகழ்வில், அவர் இயக்கி விருதுகள் குவித்த 9 திரைப்படங்களையும், ஷியாம் பெனகலில் சத்யஜித் ரே ஆவணப்படத்தையும் திரை ரசிகர்கள் காணலாம்.

புதுச்சேரி திரை இயக்கம், அலையன்ஸ் பிரான்சிஸ், மத்திய திரைப்படப் பிரிவு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்திய திரையுலக மேதை சத்யஜித் ரே நூற்றாண்டு திருவிழாவை நடத்துகிறது.

புதுச்சேரி அலை யன்ஸ் பிரான்சிஸ் திரையரங்கில் சத்யஜித் ரே படங்கள் திரை யிடப்பட உள்ளன

இதுகுறித்து அலையன்ஸ் பிரான்சிஸ் தலைவர் டாக்டர்நல்லம் சதீஷ், விழா ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் ஆகியோர் கூறியதாவது:

நாளை (இன்று) மாலை விழா தொடங்குகிறது. இந்நிகழ்வில் திரைக்கலைஞர்கள் திரிதிமான் சேட்டர்ஜி, எடிட்டர் லெனின், ரோகிணி, இயக்குநர்கள் சிவகுமார், லெனின் பாரதி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கவுரவத் தலைவர் எழுத்தாளர் தமிழ்செல்வன், அமைச்சர் லட்சுமி நாராயணன், பிரெஞ்சு தூதர் லசி டல் போட் பரே, அலையன்ஸ் பிரான்சிஸ் இயக்குநர் லீலா உட்பட பலர் பங்கேற்கின்றனர். மூன்று நாள் நிகழ்வுகளில் எழுத்தாளர்கள் ஆதவன் தீட்சண்யா, வீ.பா.கணேசன் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.

இன்று மாலை 5 மணிக்கு தொடக்க நிகழ்வாக உலக அளவில் அனைத்து திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்ட ‘பதேர் பாஞ்சாலி’ திரையிடப் படவுள்ளது.

டிசம்பர் 18-ம் தேதி காலை 9.30 மணிக்கு ‘த இன்னர் ஐ’, காலை 10 மணிக்கு ‘ப்ரதித்வந்தி’ திரைப்படமும், மதியம் 2.30 மணிக்கு ‘சாருலதா’, மாலை 5 மணிக்கு ‘அபராஜிதோ’, இரவு 7 மணிக்கு ‘போஸ்ட் மாஸ்டர்’ ஆகிய படங்கள் திரையிடப்படும்.

வரும் 19-ம் தேதி காலை 9.30 மணிக்கு ‘அபுர் சன்ஸார்’, 11.45 மணிக்கு ஷியாம் பெனகலின் சத்யஜித் ரே ஆவணப்படம், மதியம் 2.45 மணிக்கு ‘மஹாநகர்’, மாலை 6.15 மணிக்கு ‘நாயக்’ ஆகிய திரைப்படங்கள் திரையிடப்படும்.

முதல்முறையாக புதுச்சேரியில் சத்யஜித் ரே திரைப்படங்களை திரையிடுகிறோம். சத்யஜித் ரேயின் முதல் படமான ‘பதேர் பாஞ்சாலி’ திரைப்படமானது அவரின் ‘தி அபு ட்ரைலாஜி’யின் முதல் பாகமாகும். மீதமுதள்ள இரு பாகங்களான ‘அபராஜிதோ’, ‘அபுர் சன்ஸார்’ ஆகிய மூன்று படங்களும் இந்நிகழ்வில் பார்க்க முடியும். ‘பதேர் பாஞ்சாலி’யில் வரும் அபு குழந்தையாகவும், இதர பாகங்களில் அபு மகனாகவும், மனிதனாகவும், இறுதியில் தந்தையாகவும் மாற்றம் பெற்ற ரேயின் உருவாக்கத்தை முழுவதாய் ரசிக்க முடியும் என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

26 mins ago

ஜோதிடம்

36 mins ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்