மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ குற்றச்சாட்டுகள் மூலம் விளம்பரம் தேடுவதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்கள் வைகோ குற்றச்சாட்டு தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு ஸ்டாலின், "தன்னுடைய விளம்பரத்திற்காக உளறிக் கொண்டிருக்கிறார் வைகோ. அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன். அதில் வந்து அவர் சொல்லட்டும்" என்றார்.
அதேபோல், தமிழக முதல்வரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா என்ன பதிலை சொல்லப் போகிறார் என்று திமுக தலைவர் கருணாநிதி எழுப்பியுள்ள கேள்விக்கு பதிலளிக்கும்போது, "மத்திய அமைச்சர் சொல்லியிருக்கும் வெளிப்படையான குற்றச்சாட்டுக்கு தைரியம் இருந்தால், தெம்பு இருந்தால் முதலமைச்சராக இருக்கக்கூடிய ஜெயலலிதா அதற்கு விளக்கம் சொல்ல வேண்டும். அதைத்தான் திமுக தலைவர் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்" எனக் கூறிச் சென்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
23 mins ago
விளையாட்டு
45 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஆன்மிகம்
1 hour ago
கருத்துப் பேழை
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
உலகம்
2 hours ago