தீபாவளியை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி: புதுச்சேரி முதல்வர் முடிவு

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் தீபாவளியை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2 கிலோ சர்க்கரை மற்றும் 10 கிலோ அரிசியை இலவசமாக தர முதல்வர் ரங்கசாமி முடிவு எடுத்துள்ளார்.

புதுச்சேரி அரசு செயலர் உதயகுமார் இது தொடர்பாக கூட்டுறவுத்துறை பதிவாளருக்கு அனுப்பியுள்ள கடித விவரம்:

புதுச்சேரி முதல்வர் தீபாவளியையொட்டி அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2 கிலோ சர்க்கரையும் பத்து கிலோ அரிசியும் இலவசமாக ரேஷன் கடைகள் மூலம் தர முடிவு எடுத்துள்ளார்.

அதனால் நியாயவிலைக் கடைகள் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

அத்துடன் கடைகளின் பட்டியல் விவரத்தையும் இரண்டு நாட்களுக்குள் தரவேண்டும்.

கடிதத்தில் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு நவம்பர் 4 ஆம் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

22 mins ago

இந்தியா

42 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்