புதுச்சேரியில் புதிதாக 61 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டியுள்ளது.
இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று(அக். 24) வெளியிட்ட தகவலில்: ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 3,456 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இவற்றில் புதுச்சேரி-37, காரைக்கால்-11, ஏனாம்-1, மாஹே-12 பேர் என மொத்தம் 61 பேருக்கு (1.77 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 735 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 88 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 379 பேரும் என 467 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும் புதுச்சேரி கிருமாம்பாக்கம் ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்த 47 வயது ஆண், லாஸ்பேட்டை புதுபேட் 72 வயது முதியவர் என இரண்டு பேர் தொற்று பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,857 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.45 சதவீதமாக உள்ளது. புதிதாக 49 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரத்து 411 (98.18 சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் இதுவரை 11 லட்சத்து 316 பேருக்கு (இரண்டாவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.’’இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 mins ago
கருத்துப் பேழை
3 mins ago
சுற்றுலா
40 mins ago
சினிமா
45 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
வணிகம்
3 hours ago