வடசென்னை மாவட்ட தேமுதிக செயலாளராக இருந்த யுவராஜ், நேற்று திடீரென திமுகவில் இணைந்தார். இதையடுத்து வடசென்னை மாவட்ட தேமுதிக பொறுப்பாளர்களாக கு.நல்லதம்பி எம்எல்ஏ, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் மு.தளபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் ப.மதிவாணன் ஆகிய 3 பேரை விஜயகாந்த் நியமித்துள்ளார்.
இதுகுறித்து நல்லதம்பி எம்எல்ஏ கூறும்போது, “எதையாவது எதிர்பார்த்து கட்சிக்கு வருபவர்கள் , அது கிடைக்காதபோது கட்சியை விட்டு செல்வது வழக்கம். அப்படித்தான் யுவராஜின் நடவடிக்கை அமைந்துள்ளது. தேமுதிகவில் ரசிகர் மன்ற காலத்தில் இருந்து இருக்கிறேன். எனது திருமணத்தையே விஜயகாந்த்தான் நடத்தி வைத்தார். தேமுதிகவின் வெற்றிக்காக நாங்கள் பாடுபடுவோம்’’ என்றார்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
25 mins ago
ஜோதிடம்
35 mins ago
விளையாட்டு
4 hours ago
சினிமா
6 hours ago
விளையாட்டு
7 hours ago
வணிகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
க்ரைம்
9 hours ago
சுற்றுச்சூழல்
9 hours ago
க்ரைம்
9 hours ago
இந்தியா
9 hours ago