அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று பொன்விழா கொண்டாட்டம்: ஓபிஎஸ், இபிஎஸ் கொடி ஏற்றுகின்றனர்

By செய்திப்பிரிவு

அதிமுகவின் 50-வது ஆண்டு பொன்விழா தொடக்கத்தை முன்னிட்டு, தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் இன்று கட்சிக் கொடியை ஏற்றிவைத்து, தலைவர்களுக்கு மரியாதை செலுத்துகின்றனர்.

மறைந்த முதல்வர் எம்ஜிஆர், அதிமுக கட்சியைத் தொடங்கி 49 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று 50-வது ஆண்டு தொடங்குகிறது. இதையொட்டி, அதிமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்குநடக்கும் நிகழ்ச்சியில், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுகஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் மாலைஅணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். தொடர்ந்து, அதிமுககட்சிக் கொடியை ஏற்றிவைத்து,நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்பு வழங்குகின்றனர். அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள அதிமுக பொன்விழா சிறப்பு மலரையும் வெளியிடுகின்றனர்.

தொடர்ந்து, சென்னை மெரினாகடற்கரையில் உள்ள அண்ணா,எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்துகின்றனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், தலைமைக் கழக நிர்வாகிகள், தற்போதைய மற்றும் முன்னாள் எம்பி.க்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் பங் கேற்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

11 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்