தண்டவாள பராமரிப்பு பணியால் கடற்கரை - தாம்பரம் தடத்தில் இன்று 14 ரயில் சேவைகள் ரத்து

By செய்திப்பிரிவு

தண்டவாள பராமரிப்பு பணி நடப்பதால், சென்னை கடற்கரை - தாம்பரம் தடத்தில் இன்றும், 17-ம் தேதியும் 14 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே வரும் 10, 17-ம் தேதிகளில் (ஞாயிறு) காலை 11.40 மணி முதல் மாலை 3.40 மணி வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. இதனால், மேற்கண்ட நேரத்தில் கடற்கரை - தாம்பரம் தடத்தில் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி, கடற்கரை - தாம்பரம் காலை 11.00, 11.30, 11.45, மதியம் 12.20, 12.40, 1.40, 2.30 மணி ரயில்கள், தாம்பரம் - கடற்கரை காலை 11.30, மதியம் 12.10, 12.30, 1.50, 2.50, மாலை 3.30 மற்றும் திருமால்பூர் - கடற்கரை காலை 10.40 மணி ரயில்கள் ஆகிய 14 சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன.

கடற்கரை - செங்கல்பட்டு காலை 11.15, மதியம் 12.00, 1.20, 2.00, 3.00 மணி ரயில்கள், கடற்கரை - அரக்கோணம் மதியம் 1 மணி ரயில் ஆகியவை தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும். செங்கல்பட்டு - கடற்கரை காலை 10.15, 11.00, மதியம் 12.25, 1.25, 2.15 மணி ரயில்கள் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு தாம்பரம் வரை இயக்கப்படும்.

இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

க்ரைம்

21 mins ago

இந்தியா

31 mins ago

விளையாட்டு

20 mins ago

இந்தியா

36 mins ago

தமிழகம்

58 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

தொழில்நுட்பம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்