புதுச்சேரியில் 86 பேருக்கு கரோனா: மேலும் ஒருவர் உயிரிழப்பு

By அ.முன்னடியான்

புதுச்சேரியில் புதிதாக 86 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (செப். 17) வெளியிட்ட தகவலில், "புதுச்சேரி மாநிலத்தில் 5,057 பேருக்குப் பரிசோதனை செய்ததில் புதுச்சேரி-46, காரைக்கால்- 23, ஏனாம்- 2, மாஹே- 15 பேர் என மொத்தம் 86 பேருக்கு (1.70 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரத்து 256 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 158 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 761 பேரும் என 919 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

புதுச்சேரி ராஜா நகரைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,828 ஆகவும், இறப்பு விகிதம் 1.46 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

புதிதாக 129 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 509 (97.81 சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 8 லட்சத்து 88 ஆயிரத்து 894 பேருக்கு (2-வது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

இந்தியா

18 mins ago

சுற்றுச்சூழல்

28 mins ago

இந்தியா

31 mins ago

இந்தியா

38 mins ago

இந்தியா

23 mins ago

விளையாட்டு

44 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

10 hours ago

மேலும்