ராமசாமி படையாட்சியாரின்104-வது பிறந்தநாளை முன்னிட்டு, அரசு சார்பில் அமைச்சர்களும், அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் அவரது படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாட்சியாரின் 104-வதுபிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, தமிழகஅரசு சார்பில், சென்னை கிண்டிஹால்டா சந்திப்பில் உள்ள அவரதுசிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்துக்கு, அமைச்சர்கள் எம்ஆர்கே பன்னீர்செல்வம், மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் செய்தித் துறை செயலர் மகேசன் காசிராஜன், இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் ஆகியோர் பங்கேற்றனர்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செம்மலை, சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத் உள்ளிட்டோர் மலர் தூவிமரியாதை செலுத்தினர். முன்னாள் எம்எல்ஏக்கள் விருகைரவி, கே.பி.கந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பாமக சார்பில் அதன் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். சமத்துவ மக்கள் கழகம் சார்பில் அதன் தலைவர் எர்ணாவூர் நாராயணன் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘சுதந்திரப் போராட்டத்தின்போதும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் அவர் ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்து போற்றிடுவோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
உலகம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
சினிமா
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago