அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வருமானத்துக்கு அதிகமாக 73 சதவீதம் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதால், மேல் விசாரணை நடைபெற்று வருகிறது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.7 கோடி அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதால், அவர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் கொண்ட அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி சத்தியநாராயணனும், வழக்குப் பதிவு செய்வதால் எந்தப் பயனும் இல்லை என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதி ஹேமலதாவும் தீர்ப்பளித்தனர்.
இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், மூன்றாவது நீதிபதியாக நிர்மல்குமார் இவ்வழக்கை விசாரித்து வருகிறார்.
இவ்வழக்கில், ராஜேந்திரபாலாஜி தரப்பில் வாதம் முடிவடைந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா இன்று (செப். 03) வாதிட்டார்.
"ராஜேந்திரபாலாஜி மீதான புகார் குறித்த விசாரணை ஆரம்பக்கட்ட நிலையில் உள்ளது. வருமானத்தில் 10 சதவீதத்துக்கும் குறைவாக சொத்து சேர்த்ததாகக் கூறி வழக்கைக் கைவிட முடிவெடுக்கப்பட்டது. ஆனால், வருமானத்துக்கு அதிகமாக 73 சதவீதம் அளவுக்கு ராஜேந்திரபாலாஜி சொத்து சேர்த்துள்ளது தெரியவந்துள்ளது.
முழுமையான நீதிமன்ற விசாரணைக்குப் பிறகே வழக்கைக் கைவிடுவது குறித்து முடிவு செய்ய முடியும். ஆரம்பக்கட்ட விசாரணையில் அதுபோலச் செய்ய முடியாது. தற்போது மேல் விசாரணை தொடங்கியுள்ளது. இறுதி அறிக்கை தாக்கல் செய்த பிறகும்கூட, மேல் விசாரணை நடத்தலாம் என்று உயர் நீதிமன்ற முழு அமர்வு தீர்ப்பளித்துள்ளது" என்று வாதிட்டார்.
இந்த வாதத்துக்கு பதிலளிக்கவும், எழுத்துப்பூர்வமான வாதத்தைத் தாக்கல் செய்யவும் ராஜேந்திரபாலாஜி தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி நிர்மல்குமார், இவ்வழக்கு விசாரணையை வரும் 8-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
27 mins ago
ஜோதிடம்
46 mins ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
8 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
உலகம்
10 hours ago
ஆன்மிகம்
10 hours ago