புதுச்சேரியில் புதிதாக 73 பேருக்கு கரோனா: மேலும் ஒருவர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

புதுச்சேரியில் புதிதாக 73 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று(ஆக. 24)வெளியிட்டுள்ள தகவலில், ‘‘

புதுச்சேரி மாநிலத்தில் 3,131 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இவற்றில் புதுச்சேரி-30, காரைக்கால்-19, ஏனாம்-3, மாஹே-21 பேர் என மொத்தம் 73 பேருக்கு (2.33 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 23 ஆயிரத்து7 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 162 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 603 பேரும் என மொத்தமாக மாநிலம் முழுவதும் 765 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் தொற்று பாதித்த காரைக்கால் திருநள்ளார் பகுதியைச் சேர்ந்த 63 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,809 ஆகவும், இறப்பு விகிதம் 1.47 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. இதனிடையே புதிதாக 103 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரத்து 433 (97.91 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 7 லட்சத்து 85 ஆயிரத்து 656 பேருக்கு (2வது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது."இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்