மானாமதுரை அருகே அய்யனார் கோயிலில் 150 ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்திய கிராம மக்கள்

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், மானா மதுரை அருகே அய்யனார் கோயி லில் 150 ஆடுகளை பலியிட்டு கிராம மக்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மானாமதுரை அருகே கோச் சடையை அடுத்த அய்யனார்குளம் கண்மாய் கரையில் முத்தையா, கருப்பணன், பேச்சியம்மன், ராக்காயி, பத்திரகாளி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுடன் களதி உடைய அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயில் 8-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு காவல் தெய்வமாக உள்ளது.

இதில் ஏனாதிக்கோட்டை, வன்னிக்குடி கிராம மக்கள் இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் 400 ஆடுகள் வரை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். ஆடுகள் மீது தண்ணீர் ஊற்றும்போது சிலிர்த்து தரிசனம் தந்தால் மட்டுமே அவற்றை வெட்டுவர். ஒரு ஆடு சிலிர்க்காவிட்டால் கூட, வெட்டிய மற்ற ஆடுகளையும் சமைக்க எடுத்துச் செல்ல மாட்டார்கள்.

மேலும் மொத்தமாக அனைத்து ஆடுகளையும் வெட்டி முடித்த பிறகே, அவரவர் தங்களது ஆடுகளை எடுத்துச் செல்வர். இதனால் கிராம மக்கள் பக்தியோடு, விரதம் இருந்து ஆடுகளை பலி கொடுக்கின்றனர். கரோனா ஊரடங்கால் அவர்கள் கடந்த ஆண்டு நேர்த்திக்கடன் செலுத்தவில்லை. இந்தாண்டு தளர்வுகள் அளித்ததால் நேற்று ஆடுகளை நேர்த்திக்கடன் கொடுத்தனர். ஆனால் குறைவான மக்களே வந்ததால் 150 ஆடுகளே பலி கொடுக்கப்பட்டன.

கரோனா ஊரடங்கு காலம் என்பதால் ஆடுகளை வெட்டி, வழிபாடுகள் முடிந்ததும், வெட் டிய ஆடுகளை கோயிலில் சமைக் காமல், அவரவர் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். மேலும் இவ்விழாவில் ஏனாதிக்கோட்டை, வன்னிக்குடியில் இருந்து புதுடெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் குடியேறிய மக்களும் வந்து தரிசனம் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

32 mins ago

இந்தியா

41 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

1 hour ago

மேலும்